Wednesday 1st of May 2024 09:30:58 PM GMT

LANGUAGE - TAMIL
-
கனடாவில் முதல் முறையாக இரண்டாவது  கொரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டது!

கனடாவில் முதல் முறையாக இரண்டாவது கொரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டது!


கனடாவில் முதல் கோவிட்19 தடுப்பூசியைப் பெற்ற ஒன்ராறியோவைச் சேர்ந்த முதல் ஐந்து சுகாதாரப் பணியாளர்கள் ஷெர்போர்ன் தெருவில் உள்ள தி ரெக்காய் மையத்தில் நேற்று தங்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றனர்.

அனிதா குய்டாங்கன் மற்றும் அவரது நான்கு சகாக்கள் கனடாவில் முதல் நபர்களாக டிசம்பர் 14 அன்று பைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றனர்.

அன்றிலிருந்து இதுவரை ஒன்ராறியோ மாகாணத்தில் 42,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் கனடாவில் இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

இங்கிலாந்து மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 முதல் தடுப்பூசி பெற்றவர்கள் அதன் பின்னர் 52 வீதம் கொரோனாவுக்கு எதிராக செயல் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இரண்டவது தடுப்பூசி பெற்ற பின்னர் இந்தச் செயல் திறன் 95 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

நான் நன்றாக உணர்கிறேன். முதல் தடுப்பூசி கிடைத்தபோது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். இப்போது இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என கனடாவில் முதல் தடுப்பூசி பெற்ற அனிதா குய்டாங்கன் கூறினார்.

நான் பணியாற்றும் முதியோர் பராமரிப்பு மையத்தில் வசிப்போர், எனது நண்பர்கள் மற்றும் எனது சக ஊழியர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க இது உதவும் எனவும் அவா் தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE